கோவையில் 14-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: துணி எடுக்க சென்றபோது விபரீதம்


கோவை: கும்பகோணம் அருகே மேலகாவிரி காவு பாரதி நகரை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சிவமணி (64). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை, கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள மகள் வீட்டுக்கு நடராஜன் அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவமணி 14-வது மாடியில் இருந்த துணிகளை எடுக்க சென்றார்.

அப்போது அங்கிருந்து எதிர்பாராத விதமாக தவறி கார் மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனை க்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து, கவுண்டம் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x