ஈரோடு: வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணி (70). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர், இவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
சுப்ரமணியைத் தாக்கிய அந்த இளைஞர், தான் கொண்டு வந்திருந்த பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதைக்கண்டு ஜெயலட்சுமி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தோர் ஒன்று கூடி அந்த இளைஞரைப் பிடித்தனர். அவர் தப்பியோட முயன்றபோது சிலர் அவரை தாக்கினர். கழுத்து அறுபட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்ரமணி சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே சூரம்பட்டி போலீஸார், அந்த இளைஞரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராபி ஓரான் (28) எனத் தெரிய வந்தது. கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ராபி ஓரான், பொதுமககள் தாக்குதலில் காயமடைந்து இருந்த நிலையில், அவரை அரசு பொது மருத்துமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபி ஓரான், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து சூரம்பட்டி போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோட்டில் மக்கள் தாக்கியதில் வடமாநில இளைஞர் உயிரிழப்பு ஈரோட்டில் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணி (70). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர், இவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
சுப்ரமணியைத் தாக்கிய அந்த இளைஞர், தான் கொண்டு வந்திருந்த பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதைக்கண்டு ஜெயலட்சுமி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தோர் ஒன்று கூடி அந்த இளைஞரைப் பிடித்தனர். அவர் தப்பியோட முயன்றபோது சிலர் அவரை தாக்கினர். கழுத்து அறுபட்ட நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுப்ரமணி சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே சூரம்பட்டி போலீஸார், அந்த இளைஞரை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ராபி ஓரான் (28) எனத் தெரிய வந்தது. கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த ராபி ஓரான், பொதுமககள் தாக்குதலில் காயமடைந்து இருந்த நிலையில், அவரை அரசு பொது மருத்துமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபி ஓரான், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து சூரம்பட்டி போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.