அவிநாசி : திருப்பூர் மாவட்டம் அவிநாசி, செல்லாண்டியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் நவீன்குமார் (36). அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர். இவர், அவிநாசி சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.5 லட்சம் வரை பெற்றதாகவும், வீடு வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவிநாசி சூளை அருகே வசித்து வரும் ஆனந்தி என்பவர் அளித்த புகாரின் பேரில், அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, நவீன்குமாரை கைது செய்தனர்.