பள்ளி மாணவியை திருமணம் செய்த கூலித் தொழிலாளி போக்சோவில் கைது: பொள்ளாச்சி அதிர்ச்சி


பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமி 11 -ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு வெளியில் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர், பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவியை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கூலித்தொழிலாளி சிவக்குமார் (22) என்பவர் மாணவியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

கேரளாவில் இருந்த மாணவியை போலீஸார் மீட்டனர். மாணவியை அழைத்துச் சென்ற சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும், மாணவியை கேரளாவுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து, கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

x