அரக்கோணம் கோயில்களில் திருட்டு: போலீஸிடம் இருந்து தப்பித்த பெண் கைது


ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த நேதாஜி நகர், அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கடந்த சில நாட்களாக அலங்கார பொருட்கள் மற்றும் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஜனனி (36 ) என்பவரை அரக்கோணம் நகர காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து, கோயில்களில் திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, அந்த பெண்ணை சிறையில் அடைக்க தகுந்த பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் சிறைக்கு அழைத்து செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு பெண் காவலர்கள் நேற்று அழைத்து வந்தனர். அப்போது, அந்த பெண் காவலர்களிடமிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் சில மணி நேரங்களில் கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

x