குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: சிவகாசி இளைஞர் மீது வழக்கு


விருதுநகர்: சிவகாசி அருகே பள்ளி மாணவர்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை அளித்த இளைஞர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து சிவகாசி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி ரிசர்வ் லைன் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் சாம் டேவிட் (30). இவர் விருதுநகரில் நடைபெறும் பொருட்காட்சியில் கார் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். பள்ளி விடுமுறையில் பகுதி நேரமாக வேலைக்குச் சென்ற விருதுநகர் பகுதியை சேர்ந்த 9 மற்றும் பிளஸ் 2மாணவர்கள் இருவருடன் சாம் டேவிட்டுக்கு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.

சிவகாசியில் வேலை இருப்பதாக இரு மாணவர்களையும் வரவழைத்த சாம்டேவிட், தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு தெரியாமல் குளிர் பானத்தில் போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அம்மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் சாம் டேவிட் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x