மதுரையில் கோட்டாட்சியருக்கு மிரட்டல்: பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு


மதுரை: ஆய்வுக்குச் சென்றபோது கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் நீண்ட நாட்களாக வீட்டுமனைப் பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மதுரையில் கோட்டாட்சியர் ஷாலினி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மதுரை ஆனையூர் பகுதியில் கோட்டாட்சியர் ஷாலினி ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் பூட்டியிருந்த சில வீடுகள் குறித்து விசாரித்தார். அப்போது, அங்கு வந்த மதுரை கிழக்கு மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் ஹரிச்சந்திரன் மற்றும் உடன் வந்தவர்கள், அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தின ர். அப்போது அவர்களுடன் வாக்கு வாதம் செய்த ஹரிச்சந்திரன் அதிகாரிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் கோதை நாச்சியார் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பாஜக பிரமுகர் ஹரிச்சந்திரன் மற்றும் ஞானமணி, ரூபேஷ் ஆகியோர் மீது அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

x