கோவை: 13 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
கோவை சூலூர் கலங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் கிளைவ் (47). இவர் அங்குள்ள மில்லில் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 13 வயது மகளுடன் வசித்து வந்தார். தாய் வேலைக்கு சென்ற நிலையில் ராபர்ட் கிளைவ், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்தார்.
பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ராபர்ட் கிளைவ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.