அவிநாசி அருகே சொத்து தகராறு: பனியன் நிறுவன மேலாளர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு படுகொலை


அவிநாசி: அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பனியன் நிறுவன மேலாளரை துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கருவலூர் காளிபாளையம் பகுதியை சேர்ந்த சடையப்பன் மகன் கோவிந்தசாமி (54). இவர் பனியன் நிறுவனம் மேலாளர். இவருக்கும் இவரது உறவினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் கோவிந்தசாமியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவிநாசி போலீஸார், பல்வேறு இடங்களில் கோவிந்தசாமியைத் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெருமாநல்லூர் அருகே தொரவலூர் குளத்தில் வெள்ளிக்கிழமை காலை வெள்ளை சாக்கில் கட்டியபடி அட்டைப்பெட்டி மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் வெள்ளை சாக்கை மீட்டு பார்த்ததில், அதில் காணாமல் போன கோவிந்தசாமி உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் வைத்து குளத்தில் தூக்கி வீசியிருப்பது தெரிய வந்தது. மேலும் அவரது உடலில் பாதி பாகங்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஒருவரின் உடலை பெட்டி துண்டு துண்டாக அட்டைப்பெட்டியில் வீசிய சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x