வேலைக்காரரின் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்து வந்த பெண்... பதைபதைத்துப்போன போலீஸார்!


கைது செய்யப்பட்ட பெண்

உத்தரபிரதேசத்தில் வீட்டு வேலை செய்யும் ஆணின் பிறப்பு உறுப்பை அறுத்து பையில் போட்டு காவல் நிலையம் எடுத்துவந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் நேற்று அப்பகுதி காவல் நிலையத்திற்கு பரபரப்பாக ஓடி வந்துள்ளார். அவரை ஆசுவாசப்படுத்திய போலீஸார் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன் கையில் வைத்திருந்த பையை காட்டியுள்ளார்.

அந்த பையை திறந்து பார்த்த போலீஸார் அதிர்ந்து போய் நின்றனர். அதில் ஒருவரின் ஆணுறுப்பு இருந்ததுதான் அவர்களின் அதிர்ச்சிக்கு காரணம். அந்த பெண் போலீஸிடம் கூறும்போது, அவருடைய கணவர் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் என்றும், வீட்டு வேலைக்காக 23 வயது நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று, வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத சூழலில், வேலைக்காரர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். எனினும், அதில் இருந்து தப்பினேன். அப்போது நடந்த போராட்டத்தில் அவருடைய அந்தரங்க உறுப்புகளை அறுத்து எடுத்துக் கொண்டு வந்ததாக அவர் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீஸார், அங்கு வலியால் துடித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அந்த நபர் போலீஸில் வேறு வகையான விசயங்களை கூறியுள்ளார். அந்த பெண்ணுக்காக சிறுவயது முதல் வேலை செய்து வருவதாகவும், சம்பவம் நடந்த அன்று, அவரை அழைத்த அந்த பெண், மயக்கமடைய செய்து, அதன்பின் அந்தரங்க உறுப்புகளை துண்டித்து சென்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த வேலைக்காரரின் தந்தை அளித்த புகாரின் பேரில், அந்த பெண்ணுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்பு அந்த பெண் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x