தீபாவளிக்கு முன்பே திகில் கிளப்பும் சிவகாசி... பட்டாசு ஆலை விபத்துகளில் பலி எண்ணிக்கை 17 ஆனது!


பட்டாசு ஆலை விபத்து

சிவகாசி அருகே இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பட்டாசு வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்காகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (43). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ரெங்கப்பாளையம் கிராமத்தில் இயங்கி வருகிறது. அதன் அருகிலேயே பட்டாசு கடையும், சேமிப்பு கிடங்கும் உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியூரில் இருந்து பட்டாசு வாங்க வந்த சிலர் சுந்தரமூர்த்தியின் கடைக்கு அருகே பட்டாசுகளை வெடித்து பார்த்துள்ளனர். இதில் ஒரு பட்டாசு வெடித்து கடைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடையில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. கடையின் பின்புறம் பெண்கள் பட்டாசுகளை பண்டல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறின.

பட்டாசு ஆலை விபத்து

இதனால் கடையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல், சிவகாசி அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் பட்டாசு விபத்து நிகழ்ந்தது. முத்து விஜயன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளது சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x