அண்ணா பிறந்த நாள்... பனகுடி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 9 பேரும் முன்கூட்டி விடுதலை!


தமிழ்நாடு அரசு

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறைக்கைதிகள் மேலும் 9 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிகளில். நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சிறையில் இருக்கும் 9 ஆயுள் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைவாசிகள்

113-வது பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முன் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் சிறைக்கைதிகள் 9 பேரும் பனகுடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த 1999-ம் ஆண்டு இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்கள் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்த நாளையொட்டி இதுவரை 344 கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

x