திருச்சியில் 2 மகள்களை கொன்று தம்பதி தற்கொலை: கடன் தொல்லையால் விபரீதம்


அலெக்ஸ், விக்டோரியா, ஆராதனா, ஆலியா

திருச்சி: கடன் தொல்​லை​யால் 2 மகள்​களுக்கு விஷம் கொடுத்து கொன்​று, தம்​பதி தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் திருச்​சி​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​உள்ளது. திருச்சி மேல கல்​கண்​டார்​கோட்டை மூகாம்​பிகை நகரைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ்​(42). இவரதுமனைவி விக்​டோரியா ஜென்னி (35). அலெக்ஸ் அப்​பகு​தி​யில் துணிக் கடை நடத்தி வந்​தார்.

விக்​டோரியா ரயில்வே ஊழிய​ராகப் பணி​யாற்றி வந்​தார். இவர்​களது மகள்​கள் ஆராத​னா(9), ஆலி​யா(4) ஆகியோர் அப்​பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் படித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று காலை நீண்ட நேர​மாகி​யும் வீடு திறக்​கப்​ப​டாத​தால், அண்டை வீட்​டார் ஜன்​னல் வழி​யாக எட்​டிப் பார்த்​த​போது, ஹாலில் விக்​டோரியா தூக்​கிட்ட நிலை​யில் உயி​ரிழந்து கிடந்​தது தெரிய​வந்​தது. உடனே கதவை உடைத்​துக் கொண்டு வீட்​டுக்​குள் சென்று பார்த்​த​போது, மற்​றொரு அறை​யில் அலெக்ஸ் தூக்​கிட்ட நிலை​யிலும், குழந்​தைகள் ஆராத​னா, ஆலியா ஆகியோர் படுக்​கை​யில் விஷம் குடித்த நிலையிலும் உயி​ரிழந்து கிடந்தனர்.

தகவலறிந்து வந்த பொன்​மலை காவல் உதவி ஆணை​யர் சதீஷ்கு​மார், ஆய்​வாளர் வெற்​றிவேல் உள்​ளிட்ட போலீ​ஸார் 4 பேரின் உடல்​களை​யும் மீட்​டு பிரேதப் பரிசோதனைக்​காக திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். வீட்​டில் இருந்த டைரி​யில், கடன் சுமை​யால் பாதிக்​கப்​பட்​ட​தாக​வும், உறவினர்​கள் யாரும் உதவ முன்​வ​ராத நிலை​யில், கடன் கொடுத்​தவர்​கள் அடிக்​கடி வீட்​டுக்கு வந்து தொந்​தரவு செய்​வ​தால் தற்​கொலை செய்து கொள்ள முடிவு எடுத்​த​தாக​வும் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதனால், 2 குழந்​தைகளுக்​கும் பெற்​றோர் விஷம் கொடுத்​துக் கொன்​று​விட்​டு, தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்​திருக்​கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர். தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இச்​சம்​பவம் அப்​பகு​தி​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

x