ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆந்திர இளைஞர் கைது


ஜோலார்பேட்டை: சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த மருந்து விற்​பனை​யாளர், தனது மனை​வி, 9 வயது மகளு​டன் ஆந்​திர மாநிலம் கடப்​பா​வில் உள்ள குலதெய்​வ கோயிலுக்கு சென்​றார். பின்​னர், அங்​கிருந்து காச்​சிகு​டா-​நாகர்​கோ​வில் விரைவு ரயி​லில் ஊர் திரும்​பினர்.

முன்​ப​திவு பெட்​டி​யில் ஒரு இருக்​கை​யில் சிறுமி​யும், மற்​றவர்​கள் அடுத்​தடுத்து இருக்​கை​களி​லும் பயணித்​தனர். காட்​பாடியி​லிருந்து ஜோலார்​பேட்​டைக்கு ரயில் சென்​ற​போது, 30 வயது இளைஞர் ஒரு​வர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்​துள்​ளார். இதனால் அதிர்ச்​சி​யடைந்த சிறுமி கூச்​சலிட்​டார்.

உடனே அந்த இளைஞர் அங்​கிருந்து தலைமறை​வா​னார். குடும்​பத்​தினர் மற்​றும் சக பயணி​கள் தேடிய​போது, கழி​வறை அருகே‌ அந்த இளைஞர் பதுங்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. அவரைப் பிடித்து சரமாரி​யாகத் தாக்​கி, ரயில்வே போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர்.

விசா​ரணை​யில், அவர் ஆந்​திர மாநிலம் சித்​தூர் மாவட்​டம் பலமனேரியைச் சேர்ந்த குமார் (30) என்​பது தெரிய​வந்​தது. போக்சோ சட்​டத்​தின் கீழ் அவரைக் கைது செய்த போலீ​ஸார், திருப்​பத்​தூர் மாவட்ட அமர்வு நீதி மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்​தனர்.

x