கடம்பூர் அருகே இளைஞரை மிரட்டிய 7 பேர் கைது!


கடம்பூர் அருகே இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடம்பூர் அருகே குப்பனாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (31). சென்னையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கோயில் திருவிழாவுக்காக கடந்த மாதம் 29ம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 5ம் தேதி சென்னை திரும்புவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள தேவர் சிலை அருகே காருடன் நின்ற கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத் துரை மகன் கருப்பசாமி என்ற லெப்ட் கார்த்திக் உட்பட 8 பேர், கார்த்திக்கை வழிமறித்து அவதூறாக பேசி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து லெப்ட் கார்த்திக் (25), அவரது சகோதரர் மாரிச் செல்வம் என்ற குஞ்சு (30), ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த சோலையப்பன் மகன் தினேஷ் (23), சாஸ்திரி நகரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (25), கொம்பையா மகன் மகேஷ் (20), முருகேசன் மகன் சிவபெருமாள் (29), பங்களா தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் விஜயகுமார் (29) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சின்ன ஜமீனை போலீஸார் தேடி வருகின்றனர்.

x