சொத்து தகராறில் மகனை வெட்டி கொலை செய்த தந்தை - மன்னார்குடி அருகே பயங்கரம்


மன்னார்குடி அருகே சொத்து தகராறில் மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை, நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு என்ற பால கிருஷ்ணன் (58). ஒப்பந்ததாரரன இவருக்கு, அரவிந்த மோகன் (35), அருள் மோகன் (32) என்ற 2 மகன்கள் உள்ளனர். பாலு குடும்பத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சொத்து குறித்த பாகப் பிரிவினை நடைபெற்றது.

இதில், மூத்த மகன் அரவிந்த மோகனுக்கும், அவரது தந்தை பாலுவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை பாலு, அரவிந்த மோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அப்போது, தடுக்க முயன்ற தயார் பவானி (50), அரவிந்த மோகனின் மனைவி ஜெயப்பிரதா இருவரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்த அரவிந்த மோகனை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அரவிந்த மோகனின் மனைவி அளித்த புகாரின் பேரில், தந்தை பாலு மீதும், சகோதரர் அருள் மோகன் மீதும் கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பாலு நேற்று மதியம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தி ல் தனது மகனை கொலை செய்தது தொடர்பாக சரண் அடைந்தார்.

x