பெண் போலீஸை காதலித்து ஏமாற்றிய விழுப்புரம் ஆயுதப்படை காவலருக்கு ஓராண்டு சிறை!


விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தில் வசிப்பவர் அருள் (32), விழுப்புரம் ஆயுதப்படை காவலர். சென்னையில் பணியாற்றிய போது, தன்னுடன் பணியாற்றிய பெண் போலீஸை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவலர் அருளை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் காவலர் அருளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பு வழங்கினார்.

x