ரூ.28,000 செலுத்தினால் 30 நாளில் ரூ.1 லட்சம் - புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் பல கோடி மோசடி!


புதுச்சேரியைச் சேர்ந்த பலருக்கும் ஆன்லைன் லிங்க் மூலமாக ( SHOPIFY, E2, G2, NEWYARK, GD7, GD6, NYE20, PO1 1 GIFT, C 23 ) போன்ற பல்வேறு ஆப்-களை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர்.

இந்த ஆப் மூலம் 3,500 ரூபாய் செலுத்தினால் 30 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு தலா 112 ரூபாய் தருகிறோம் என்றும், 28 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 30-வது நாளில் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஆப்களில் பணம் செலுத்திய ஒரு சிலருக்கு தொடர்ந்து 60 நாட்களும் அவர்கள் சொன்னபடி பணத்தை கொடுத்ததோடு முதலீடு செய்த பணத்தை யும் 60-வது நாளில் திருப்பி கொடுத்து உள்ளனர்.

இதனை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்கள் மூலம் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் நேற்று புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடியில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்தோர் பல கோடி ரூபாயை இழந்திருக்க வாய்ப்புள்ளதாக சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்தனர்.

x