திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் முருகன் (54). இவர் மீது பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து மிரட்டியதாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேல் முருகன் தீர்ப்பளித்தார். இதில் தலைமையாசிரியர் முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2,02,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.