மதுரையில் வழிப்பறிக்கு திட்டமிட்ட 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது


மதுரையில் சித்திரைத் திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறிக்கு முயன்ற 2 சிறுவர்கள் உட்பட 6 பேரை, போலீஸார் கைது செய்தனர்.

மதுரை விளக்குத்தூண் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் யானைக்கால் தரைப்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாகச் சென்ற சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் செல்லூர் நந்தவனம் பகுதி திவாகர் (20), வடக்குமாசி வீதியைச் சேர்ந்த கோபிநாத் (21), செல்லூர் போஸ் வீதி ஹரி கிருஷ்ணா வீதி முத்துப் பாண்டி (19), வாகைகுளம் பகுதி செல்வம் (19) மற்றும் 2 சிறுவர்கள் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களை ஆய்வு செய்த போது, வாள் போன்ற ஆயுதங்களை காட்டி சித்திரைத் திருவிழாவைக் காண மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார், 2 சிறுவர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

x