பாலியல் வழக்கில் கைதான கோவை மதபோதகர் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி மனு


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கோவை மதபோதகர் ஜான் ஜெபராஜ் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்துவ மத பாடல்கள் மூலமாக சமூக வலைதளத்தில் பிரபலமானவர் கோவை மதபோதகரான ஜான் ஜெபராஜ், கடந்தாண்டு மே.21 அன்று கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்திருந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக கோவை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

x