முத்ரா கடன் பெற்று தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி - புதுச்சேரி போலீஸ் விசாரணை


புதுவை சண்முகாபுரத்தைச் சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், சுய தொழில் தொடங்க முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவதாகவும், இதற்கு சேவை கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 800 வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தி சண்முகா புரத்தைச் சேர்ந்தவர் ஏமாந்துள்ளார். இதே போல் ரெயின்போ நகரைச் சேர்ந்த ஒருவரை சமூக வலை தளம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன் லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி ரூ.5 ஆயிரம் முதலீடு செய்த ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ஏமாந்துள்ளார்.

இதேபோல் லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ஆன்லைன் மூலம் கார் முகப்பு விளக்கு வாங்க ரூ.8 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் ஆன்லைன் மூலம் வாட்ச் மற்றும் இயர் பட்ஸ் வாங்க ரூ.2 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளார். இந்த மோசடிகள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x