தஞ்சாவூரில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: போக்சோவில் இளைஞர் கைது


தஞ்சாவூர்: வல்லம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், அண்மையில் 14 வயது சிறுமி ஒருவர் தனது அம்மாவின் செல்போனை அவரிடம் அளிப்பதற்காக வயல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அச்சிறுமியை கூலித் தொழிலாளியான ர.நளன் (24) மறித்து, செல்போன் எண்ணைக் கேட்டு மிரட்டி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் நளனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x