திருச்சி மாணவிக்கு ஆபாச செய்திகள் அனுப்பி தொல்லை: போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு


திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் அரசு போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு படித்து வந்த மாணவிக்கு நாமக்கல் மாவட்டம் தாழையூர் மாங்குடிப்பட்டியைச் சேர்ந்த செ.சித்தன் (48) என்பவர் செல்போனில் ஆபாசமாக பேசி. ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்தியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் பகுதியில் இருந்த சித்தனை பிடிக்க திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் உள்ளிட்ட போலிஸார் முயன்றபோது, அவர்களிடம் இருந்த தப்பிக்க உய்யக் கொண்டான் வாய்க்கால் பாலத்தில் இருந்து குதித்ததில் அவரது கால் எலும்பு முறிந்தது. போலிஸார் அவரை கைது செய்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

x