சிவகங்கை: காரைக்குடியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக மாநகராட்சி கவுன்சிலர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்குடி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்துக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். சுப்ரமணியபுரத்தில் உள்ள கிளப்பில் சூதாடியதாக திமுக மாநகராட்சி கவுன்சிலர் ஹரிதாஸ் உட்பட 23 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 3 கார்கள், 15 இருசக்கர வாகனங்கள், பணம், டோக்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமீன் மூலம் விடுவித்தனர்.