திருவாரூர்: மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழ வீதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் குன்னோஜி ராஜாம்பாளையம் தெருவைச் சேர்ந்த வடிவேல் (40) என்பவர், நேற்று முன்தினம் இரவு பணம் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மருந்து கடை ஊழியர் வினோத் (40) மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தலைமை காவலர் இளைய ராஜா (35) வடிவேலுவை விசாரிப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, வடிவேல் உருட்டு கட்டையால் தலைமை காவலரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த இளைய ராஜா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, தலைமை காவலரை தாக்கிய வடிவேலுவை மன்னார்குடி போலீஸார் கைது செய்தனர். மேலும், வடிவேல் போலீஸாரின் ரவுடி பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.