விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரன் (50). இவர் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பால் கறக்கும் வேலை செய்து வந்தார்.
2023ம் ஆண்டு அக்.16ம் தேதி வீரன் 3 சிறுமிகளுக்கு சைகை மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் அளித்த புகாரில் கீழ ராஜ குல ராமன் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து வீரனைக் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் வீரனுக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.