உளுந்தூர்பேட்டை: வீடுகளில் புகுந்து பாத்திரங்களை திருடியதாக இளைஞர் மீது கிராம மக்கள் தாக்குதல்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எம்.குன்னத்தூர் கிராமத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள் திருடு போனது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவரைப் பிடித்த கிராம மக்கள் அவரிடம் விசாரணை நடத்திய போது, வீடுகளில் உள்ள பித்தளைப் பாத்திரங்களை திருடி, இரும்புக்கடையில் அவர்தான் விற்று வந்ததாக அங்கிருந்த சிலர் கூற, இதையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கிராம மக்கள் முயன்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அந்த இளைஞரை மின் கம்பத்தில் கட்டிவைத்து, சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருநாவலூர் போலீஸார், அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அப்பகுதியில் உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த பால கிருஷ்ணன் (25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x