வேலூர்: பள்ளிகொண்டா அருகே குடும்ப தகராறில் மனைவியைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்த கணவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கீழ்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் கட்டிடத் தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தோல் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த போது அணைக்கட்டு அடுத்த ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய சாந்தி (24) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீப நாட்களாக மனைவியின் நடத்தையில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ரவிக்குமார் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நிலையில் நேற்று காலை மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ரவிக்குமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவி விஜயலட்சுமியின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த விஜயலட்சுமி அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். பின்னர், ரவிக்குமார் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருவரின் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், உட்புறமாக தாளிடப்பட்ட வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த விஜய சாந்தி மற்றும் ரவிக் குமாரையும் மீட்டு பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் விஜய லட்சுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அந்த நேரத்திலும் ஆத்திரம் அடங்காமலிருந்த ரவிக்குமார், மருத்துவமனையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மீண்டும் இறந்த மனைவியின் உடலைச் சரமாரி குத்தியுள்ளார். இதைப்பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அங்கிருந்த பிற ஊழியர்கள் உதவியுடன் அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர். இந்த தகவலை அடுத்து பள்ளிகொண்டா காவல் துறையினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். மேலும், விஜய லட்சுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை வழக்கு தொடர்பாக ரவிக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.