ஆலங்குளத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது


தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு காவலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (34), கட்டிட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த 5 வயது சிறுமியை பார்த்த வேல் முருகன், வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த சிறுமியை ஏமாற்றி, இருள் சூழ்ந்த பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதையடுத்து ஊர் மக்கள் அங்கு திரண்டு சென்று, வேல் முருகனை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீஸார் அங்கு சென்று, வேல்முருகனை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்தனர்.

x