கரூர்: பாலவிடுதி அருகே தனிப்பட்ட முறையில் வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த காவலர் ஆயுதப் படைக்கு நேற்று மாற்றப்பட்டார்.
பாலவிடுதி காவல் நிலையத்தில் எழுத்தர் பணியாற்றி வந்தவர் சிவகுமார் (38). இவர் தனது நண்பருடன் சேர்ந்து மே 2, 3 ஆகிய தேதிகளில் இரவு வேளையில், பாலவிடுதியில் இருந்து வையம்பட்டி வழியாக மணப்பாறை செல்லும் சாலையில், சேர்வைக்காரன்பட்டி பகுதியில் நின்று கொண்டு, தனிப்பட்ட முறையில் அவ்வழியாக வந்த வாகனங்களை டார்ச் லைட் அடித்து நிறுத்தி பணம் வசூலில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், எழுத்தர் சிவகுமாரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டார்.