திருப்பூர்: திருப்பூரில் குடும்பத் தகராறில் செவிலியரை கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யுள்ள பூம்புகார் நகரில் காலி இடத்தில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது நேற்று தெரியவந்தது.
சடலத்தை தெற்கு போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப் பட்டிருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இறந்த பெண் செவிலியர் உடை அணிந் திருந்தார். இதைக் கொண்டு விசாரணை நடத்திய தில், அவர் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சித்ரா (27) என்பதும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ராஜேஷ்கண்ணன்-சித்ரா தம்பதிக்கு 9 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறால், தனது தாய் சீதாவுடன் சித்ரா திருப்பூர் வந்தார்.
தமிழ்நாடு திரையரங்கம் பின்புறம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் வந்த ராஜேஷ் கண்ணன், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சித்ராவை வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் வராததால், கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜேஷ் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டார்" என்றனர்.