ஊட்டியில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை


ஊட்டி: கூடலூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 4 வயது மகள், கடந்த 2023, அக்டோபர் 18-ம் தேதி தனது தாத்தா வீட்டுக்கு சென்றார். அப்போது, சிறுமியை அவரது தாத்தா பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை கூடலூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் ஆய் வாளர் சித்ரா தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். போக்சோ சட்டத்தில் சிறுமியின் தாத்தாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாத்தாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.செந்தில்குமார் ஆஜரானார்.

x