5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடலூரில் 58 வயது நபர் குண்டர் சட்டத்தில் கைது


கடலூர்: கடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமியிடம் முருகேசன் என்பவர் கடந்த 14ம் தேதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் தீபா இது குறித்து விசாரணை மேற்கொண்டு, சீர்காழி கண்ணன் குளத்தைச் சேர்ந்த முருகேசன் (58) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக் மார் பரிந்துரையின் பேரில், கடலூர் ஆட்சியர் சி. ஆதித்யா செந்தில் குமார், முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் கடலூர் மத்திய சிறையில் உள்ள முருகேசனிடம் இதற்கான உத்தரவு நகலை நேற்று முன்தினம் வழங்கினர்.

x