வேடச்சந்தூர் மளிகை கடைக்காரரிடம் தங்கமோதிரம் பறிப்பு; வருமான வரித்துறை அதிகாரி என மோசடி!


திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், சுள்ளெறும்பு நால் ரோட்டில் மளிகைக் கடை வைத்துள்ளார். இவர், நேற்று காலை வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழி மறித்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் என்றும், நீங்கள் வருமான வரி செலுத்தாமல் பணம் வைத்துள்ளீர்கள் எனக் கூறி அவரது இருசக்கர வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.

பின்னர் பழனிச்சாமி அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு, அவரது இரு சக்கர வாகனத்தின் சாவியையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து பழனிச்சாமி அளித்த புகாரில் வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x