சிவகங்கையில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: ஆட்சியர் அதிரடி


சிவகங்கை: கொலை, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய 8 பேர், நேற்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடியில் கடந்த மாதம் காவல் நிலையம் அருகே மனோஜ் என்பவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக, காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற பாலா (20), மதன் என்ற மதன் ராஜ் (19), சுரேஷ் கண்ணன் என்ற சுரேஷ் (27), சக்தி வேல் (20), காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22), குரு பாண்டி (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

அதேபோல், சிங்கம்புணரி போலீஸார் திருட்டு வழக்கு ஒன்றில் மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ராமு (31), லதா (42) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் 8 பேரையும், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

x