சொத்து தகராறில் சித்தப்பா கொலை: நெல்லையில் இளைஞர் உட்பட 2 பேர் கைது


திருநெல்வேலி: வடக்கு பொன்னாக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (48). இவருக்கும் அவரது அண்ணன் மாரிமுத்து மகன் இசக்கி முத்து (28) என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் அருணாச்சலம் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இசக்கி முத்துவுக்கும், அருணாச்சலத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அருணாச்சலம் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட இசக்கி முத்து, மாரி முத்துவின் மனைவி சுப்பு லட்சுமி (50) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

x