ராமேசுவரம் தனியார் தங்கும் விடுதியின் மாடியிலிருந்து கீழே விழுந்து மேலாளர் உயிரிழப்பு


ராமேசுவரம்: ராமேசுவரம் கோயில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து விடுதி மேலாளர் உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம் கரையூர் பகுதியை சேர்ந்த விஜய் (21) என்பவர் ராமநாதசுவாமி கோயிலின் மேல ரத பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்தார். திங்கட்கிழமை இரவு பணிக்கு சென்ற விஜய், விடுதியின் நான்காவது தளத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்த நிலையில், போலீஸாரால் உடல் மீட்கப்பட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ராமேசுவரம் போலீஸார், விஜய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது போன் பேசிக் கொண்டிருக்கும் போது கீழே தவறி விழுந்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x