தென்காசியில் பரபரப்பு: விஏஓவை மிரட்டிய காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு!


தென்காசி: குருவிகுளம் அருகே உள்ள அழகனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (45). காங்கிரஸ் பிரமுகரான இவர், தனது ஆதரவாளர் ஒருவருக்கு அரசு உதவியுடன் வீடு கட்டும் திட்டத்துக்கு, குருவிகுளம் கிராம நிர்வாக அலுவலரிடம் பரிந்துரை செய்தார். அதனை, தெற்கு குருவிகுளம் கிராம நிர்வாக அலுவலர் செல்லத்துரை ஏற்க மறுத்தார்.

இதனால், கண்ணன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குருவிகுளம் காவல் நிலையத்தில், செல்லத்துரை புகார் அளித்தார். கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x