இலங்கைக்கு கடத்த முயன்ற 1,023 கிலோ பீடி இலைகள் பறிமுதல்


தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 1023 கிலோ பீடி இலைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின்போது சந்தேகத்திற்குரிய முறையில் கல்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதி கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பைபர் படகினை சோதனையிட்டனர். அவற்றில் இருந்த 380 கிலோ, 643 கிலோ என 1023 கிலோ பீடி இலைகளுடன் இரு படகுகளையும் அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், அந்நாட்டு சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x