மயிலாடுதுறை: குத்தாலம் வட்டம் மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(50). இவர், தனது நண்பர் வீட்டுக்கு சென்றபோது, 2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மனமுடைந்த ராஜா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.