சமூக வலைத்தளத்தில் சிறுமிக்கு தொந்தரவு: சென்னையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது


சென்னை: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் சென்னை இருக்கஞ்சேரியை சேர்ந்த கிஷோர் (22), முகமது அலி (22) ஆகியோர் பழகி வந்துள்ளனர். சமூக வலைத் தளம் மூலம் தொடர்ந்து சிறுமியிடம் பேசிய 2 பேரும், வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

பின்னர், சிறுமியிடம் தாங்கள் அழைக்கும் இடத்துக்கு வர வேண்டும் என்றும், இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து பெற்றோரின் கவனத்துக்கு சிறுமி கொண்டு செல்ல, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, போலீஸார் புகார் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் பெண் குரலில் பேசி கிஷோர், முகமது அலியை சேலத்துக்கு வரவழைத்து, போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

x