கடலூர்: திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (48). இவரது மனைவி லதா, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று அரியலூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பழனிவேல் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதையறிந்த அப்பகுதி மக்கள், பழனிவேலை சரமாரியாக தாக்கி திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பழனிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.