ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று அதிகாலை ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.2.41 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸார், அங்கு பணியில் இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் உதவியாளர் காயத்ரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.