ஓசூர் சோதனை சாவடி​யில் ரூ.2.41 லட்​சம் பறி​முதல்


ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் ஜுஜு​வாடி வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலக சோதனைச் சாவடி​யில் வாகன ஓட்​டிகளிடம் லஞ்​சம் பெறு​வ​தாக, லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸாருக்​குப் புகார்​கள் வந்​தன. இதையடுத்​து, டிஎஸ்பி நாக​ராஜ் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று அதி​காலை ஜூஜு​வாடி சோதனைச் சாவடி​யில் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அங்கு கணக்​கில் வராத ரூ.2.41 லட்​சத்தை பறி​முதல் செய்த போலீ​ஸார், அங்கு பணி​யில் இருந்த வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலரின் உதவி​யாளர் காயத்ரி மற்​றும் ஊழியர்​களிடம் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்​.

x