கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே மேலப்பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29). இவரது மனைவி சினேகா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆவேசமடைந்த விக்னேஷ், ஆவே தின்னர் என்ற திரவத்தை எடுத்து மனைவி மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா கணவரை கட்டிப் பிடித்தார். இதில் தப்பித்த விக்னேஷ் காயத்துடன் வெளியே ஓடினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று இருவரையும் மீட்டு
காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சினேகா மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த விக்னேஷ் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இது குறித்து நேற்று காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சினேகாவின் தாய்மாமன் ராஜீவ் காந்தி புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.