காரைக்கால்: காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(33). இவர், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாகை மாவட்டம் பறவை பகுதியில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் புகுந்து, அங்கிருந்த தாய், மகள் இருவரையும் தாக்கி, பாலியல் தொந்தரவு அளித்து தப்பியுள்ளார். இது குறித்து வேளாங்கண்ணி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முத்துவை கைது செய்தனர்.
நாகை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முத்துவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கார்த்திகா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.