பூனை கடித்து சிகிச்சை பெற்ற இளைஞர்: மதுரை அரசு மருத்துவமனையில் தற்கொலை


மதுரை: அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு பூனை கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று முன்தினம் இரவு அவரை சேர்த்தனர். இதனிடையே நேற்று அதிகாலையில் தனி அறையில் இருந்த பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அரசு மருத்துவமனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x