உடுமலை அருகே அதிர்ச்சி: கல் குவாரியில் 8 வயது சிறுமி சடலமாக மீட்பு


உடுமலை: மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட மைவாடி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் இருந்து கனிம வளம் எடுக்கப்பட்ட நிலையில் பயன்பாடின்றி உள்ளன. அவற்றில் மழை நீர் தேங்கியுள்ளது. கல்குவாரி குழி அருகே உள்ள தனியார் அட்டை தயாரிப்பு நிறுவனத்தில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி லால்பகதூர் ராம் என்பவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இவரது மகள் ரோஷினி குமாரி (8) என்பவர் கல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் சென்ற சிறுமி கொடுத்த தகவலின் பேரில் அக்கம் பக்கத்தினர், மடத்துக்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின் சிறுமியை சடலமாக மீட்டனர். இது குறித்து மடத்துக்குளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

x