போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.5000 லஞ்சம்: விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்


விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 5 பேரிடம் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த வழக்கிற்கு தொடர்பில்லாத இருவரிடமும் விசாரணை நடத்திய ஆய்வாளர் ஜெயலட்சுமி, தொடர்பில்லாத இருவரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த செயலுக்கு காவல் நிலைய தலைமைக் காவலர் சிவசக்தி என்பவர் உடந்தையாக இருந்தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார் விசாரணை நடத்தி, உண்மைத் தன்மை குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஐஜி உத்தரவின்பேரில் நேற்று ஜெயலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து எஸ்பி ஜெயக்குமார், உடந்தையாக இருந்த சிவசக்தியையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

x