இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகை ஜனனிக்கும், சாய் ரோஷன் ஷ்யாம் என்பவருக்கும் புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நடிகை ஜனனி கரம் பிடிக்கும் சாய் ரோஷன் ஷ்யாம் ஒரு விமானி ஆவார். தனது நிச்சயதார்த்தம் குறித்த தகவலுடன் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
‘Now and Forever’ என்ற ஸ்டேட்டஸ் உடன் திருமணத் தகவலை அப்டேட் செய்துள்ள ஜனனிக்கு திரையுலக நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘அவன் இவன்’ படத்துக்குப் பிறகு, அசோக் செல்வனின் ‘தெகிடி’ படம் மூலம் கவனம் ஈர்த்தார் ஜனனி. மாடலிங், சினிமா என வலம் வந்த ஜனனி, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.